Event Details
பெயர் - மு. ஜெயசூரியா
வகுப்பு - முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
துறை - தமிழ்த்துறை
1. திருப்பத்தூர் மாவட்டத்தின் தமிழ் வளர்ச்சித் துறையானது 03.06.2022 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளினை முன்னிட்டுத் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இப்பேச்சுப் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் இரண்டு மாணவர்கள் வீதம் மொத்தம் பதினைந்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெற்றுப் பேசினர். இப்பேச்சுப் போட்டியில் தூய நெஞ்சக் கல்லூரியின் முதுகலைத் தமிழ்த்துறை மாணவர் மு.ஜெயசூரியா மாவட்ட அளவில் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இதனைப் பாராட்டி வெற்றிச் சான்றிதழும் 5000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
2. திருப்பத்தூர் மாவட்டத்தின் தமிழ் வளர்ச்சித் துறையானது 15.09.202 ஆம் நாளன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை முன்னிட்டுத் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். இப்பேச்சுப் போட்டியில் தூய நெஞ்சக் கல்லூரியின் முதுகலைத் தமிழ்த்துறை மாணவர் மு. ஜெயசூரியா மாவட்ட அளவில் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இதனைப் பாராட்டி வெற்றிச் சான்றிதழும் 5000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
3. . திருப்பத்தூர் மாவட்டத்தின் தமிழ் வளர்ச்சித் துறையானது 17.09.202 ஆம் நாளன்று தந்தைப் பெரியார் பிறந்த நாளினை முன்னிட்டுத் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். இப்பேச்சுப் போட்டியில் தூய நெஞ்சக் கல்லூரியின் முதுகலைத் தமிழ்த்துறை மாணவர் மு. ஜெயசூரியா மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினைப் பெற்றுள்ளார். இதனைப் பாராட்டி வெற்றிச் சான்றிதழும் 3000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
4. திருப்பத்தூர் மாவட்டத்தின் தமிழ் வளர்ச்சித் துறையானது 14.11.202 ஆம் நாளன்று ஜவகர்லால் நேரு பிறந்த நாளினை முன்னிட்டுத் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். இப்பேச்சுப் போட்டியில் தூய நெஞ்சக் கல்லூரியின் முதுகலைத் தமிழ்த்துறை மாணவர் மு.ஜெயசூரியா மாவட்ட அளவில் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இதனைப் பாராட்டி வெற்றிச் சான்றிதழும் 5000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பிற்குரிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கரங்களால் இப்பரிசுகள் வழங்கப்பட்டன.