Event Details

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியும் காக்கணாம்பாளையம் இயற்கை மீட்பு அறக்கட்டளையும் இணைந்து "நெகிழியற்ற திருப்பத்தூர் வளமான திருப்பத்தூர்" என்ற முழக்கத்தோடு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராகத் துணிப்பைகளைப் பயன்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு 24.01.2024 அன்று திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்வுக்கு கால்நடை மருத்துவர் அன்புச்செல்வன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வுக்கான நோக்கத்தினை கல்லூரியின் முதல்வர் அருட்திரு முனைவர் மரிய ஆண்டனிராஜ் அவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து மாணவர்களுக்குத் துணிப்பை விநியோகிக்கும் அரங்கத்தினை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து "நெகிழிப்பை பயன்படுத்த மாட்டோம்" என்கிற உறுதி மொழியை மாணவர்களும் பொதுமக்களும் எடுத்துக் கொண்டனர். திருப்பத்தூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உரையாற்றி பொதுமக்களுக்குத் துணிப் பைகளை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்த்துறை உதவி பேராசிரியரும் இந்நிகழ்வின் இந்த நிகழ்வில் 1000 பொதுமக்களுக்கு  விலையில்லா துணிப் பைகளை வழங்கி நெகிழியைக் கைவிட்டு துணிப் பைகளுக்குத் திரும்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கல்லூரியில் ஒவ்வொரு பேராசிரியர்களுக்கும் விலையில்லா துணிப்பைகளை முதல்வர் தந்தை அவர்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.